நாளை முதல் தமிழ் பார்வையாளனுக்கு….??????

By இராம்/Raam

கண்டமேனிக்கு கவுத்தடிச்சு யோசிச்சாலும் நமக்கு மட்டுப்படாத விஷயம் ஒன்னே ஒன்னுங்க. எல்லாத்தையும் கூட்டி கழிச்சு வகுத்து பெருக்கி பார்த்தும் புரியமாட்டேங்கீதுங்க. என்னான்னு நீங்க கேட்கிறது புரியுது, ஒருத்தவங்க் வீட்டுக்குள்ளே தகறாறு போலே அதுனாலே அவங்க பண்ண தொழிலே பிரிச்சிக்கிட்டாங்க. சரி அதுக்குக்காக புது கடை ஒன்னு ஆரம்பிக்கிறாங்க. பத்து கடைக்கு இருபது கடையா வைச்சிருக்கிற ஒருத்தர்க்கு போட்டியா ஆரம்பிக்கிறாங்க. அதுவும் அவங்களுக்குள்ளே ஒட்டும் ஒறவுமா இருந்துட்டு இப்போ தனிகடை போடப்போறாங்களாம்.

இந்த கடை எவ்வளோ நாளா இருக்கும், மறுபடியும் அவங்க கூடிட்டா இந்த கடையா மூடிருவாங்களா? இல்ல இந்த கடையே அந்த கடைகளோட சேர்ந்துருவாங்களா?

முன்னாடி எங்கயோ எதோ ஒரு ஜோக் ஒன்னு படிச்சேன். (இல்லாத) எமலோகத்திலே நைட் 7.30 மணிக்கு பச்சை விளக்கு எரியும், 8மணிக்கு மஞ்சள் லைட் எரியுமின்னு இப்போ இந்த கடையிலும் 7.30′க்கு எதோ கொடுக்க போறாங்களாமே, அப்போ இனிமே 7.30 மணிக்கு பச்சையும்,மஞ்சள் விளக்கு சேர்ந்து எரியுமா??

39 பதில்கள் “நாளை முதல் தமிழ் பார்வையாளனுக்கு….??????” க்கு;

  1. நாமக்கல் சிபி சொல்வதென்னவென்றால்:

    !?

  2. Anonymous சொல்வதென்னவென்றால்:

    Please ask this from

    ducky
    whacky
    shaky
    mucky
    pricky
    tucky
    yucky

  3. ILA(a)இளா சொல்வதென்னவென்றால்:

    அட சாமி, என்னமோ பெரிய உள்குத்தா இருக்குமோன்னு விட்டத்தை பார்த்து யோசனை பண்ணினா அந்த டிவி மேட்டர்தானா…

  4. Anonymous சொல்வதென்னவென்றால்:

    யோவ் நீ எத பத்தி பேசற அத சொல்லிட்டு பேசு இப்படி யாருக்கும் புரியாத மாதிரி உனக்கு நீயே பேசிக்காத

  5. அபி அப்பா சொல்வதென்னவென்றால்:

    என்ன தல ஏதோ அரசியல் கட்டுரை போல இருக்கே! கலைஞர் டி வி இன்னிக்கு திறப்பு விழாவேமே! என்னவோ போங்க!!!

  6. Anonymous சொல்வதென்னவென்றால்:

    தலைப்பு’லேய சொல்லிட்டியே? உனக்கு வேற என்ன வேணும்??

  7. இராம் சொல்வதென்னவென்றால்:

    /Collapse comments

    நாமக்கல் சிபி said…

    !?//

    தள,

    நீங்க ஆச்சரியப்படுறதும் கேள்விப்படுறதும் சரிதான்… :)

  8. இராம் சொல்வதென்னவென்றால்:

    / Anonymous said…

    Please ask this from

    ducky
    whacky
    shaky
    mucky
    pricky
    tucky
    yucky///

    சரிங்க அனானி’ண்ணே….

  9. இராம் சொல்வதென்னவென்றால்:

    //ILA(a)இளா said…

    அட சாமி, என்னமோ பெரிய உள்குத்தா இருக்குமோன்னு விட்டத்தை பார்த்து யோசனை பண்ணினா அந்த டிவி மேட்டர்தானா…//

    விவ்,

    அதே… அதே….. :)

  10. இராம் சொல்வதென்னவென்றால்:

    // Anonymous said…

    யோவ் நீ எத பத்தி பேசற அத சொல்லிட்டு பேசு இப்படி யாருக்கும் புரியாத மாதிரி உனக்கு நீயே பேசிக்காத//

    அனானி,

    நீ புரியாமே நடிச்சா நான் என்னாய்யா பண்ணுவேன்???

  11. இராம் சொல்வதென்னவென்றால்:

    /அபி அப்பா said…

    என்ன தல ஏதோ அரசியல் கட்டுரை போல இருக்கே! கலைஞர் டி வி இன்னிக்கு திறப்பு விழாவேமே! என்னவோ போங்க!!!//

    தொல்ஸ்’ண்ணே,

    நீங்கல்லாம் பிறந்தப்பவே இந்த கேள்விக்கு பதில் சொல்லுறதுக்கு தகுதியானவர் தானே??? இப்பிடியெல்லாம் கேள்வி கேட்கீறீங்க???

  12. இராம் சொல்வதென்னவென்றால்:

    // Anonymous said…

    தலைப்பு’லேய சொல்லிட்டியே? உனக்கு வேற என்ன வேணும்??//

    ஏய்யா, பிளாக்கர் ஐடி கிரியேட் பண்ண எவ்வளோ நேரமாகும்….????

    பேர் போட்டு கருத்து சொல்ல அம்புட்டு பயமா?????? :(

  13. விஷயம் விளங்கியவன் சொல்வதென்னவென்றால்:

    பத்து கடைக்கு இருபது கடையா வைச்சிருக்கிற ஒருத்தர்க்கு – இது யாருன்னு உலகத் தமிழ் வாசகர்களுக்கே நல்லாத் தெரியும்.(10 -20 பிளாக் வெச்சிருக்காரு ஒருத்தரு)

    அவங்களுக்குள்ளே ஒட்டும் ஒறவுமா இருந்துட்டு இப்போ தனிகடை போடப்போறாங்களாம். – அடப் பாவமே!

    //முன்னாடி எங்கயோ எதோ ஒரு ஜோக் ஒன்னு படிச்சேன். (இல்லாத) எமலோகத்திலே நைட் 7.30 மணிக்கு பச்சை விளக்கு எரியும், 8மணிக்கு மஞ்சள் லைட் எரியுமின்னு இப்போ இந்த கடையிலும் 7.30′க்கு எதோ கொடுக்க போறாங்களாமே, அப்போ இனிமே 7.30 மணிக்கு பச்சையும்,மஞ்சள் விளக்கு சேர்ந்து எரியுமா??//

    இதுதான்யா வெளங்கலை!

    - இந்தப் பதிவைப் படிச்சிட்டு மேற்கண்டவாறு யாராவது புரிஞ்சிகிட்டா அதுக்கு எங்க அண்ணன் இராம்ஜி அவர்கள் பொறுப்பல்ல!

  14. பெரியண்ணா சொல்வதென்னவென்றால்:

    வாழ்த்துக்கள் இராம்!

    :)

  15. எல்லாரும் ஓடியாங்கோ சொல்வதென்னவென்றால்:

    அனைவரும் வருக!

    இன்னிக்கு இங்கதான் கேம்ப்!

  16. விவாதக் களம் சொல்வதென்னவென்றால்:

    இங்கே நாங்க எல்லாம் சேர்ந்து விவாதிக்கப் போறோம்!

    எங்க இராம் அண்ணா நல்லவரா கெட்டவரா?

    இதான் தலைப்பு!

    ம்.ஸ்டார்ட் மீசிக்!

  17. வாந்தி ச்சே வாதி சொல்வதென்னவென்றால்:

    எங்க இராம் அண்ணான் நல்லவர்தான் என்று பிராது கொடுக்க வந்திருக்கிறேன்!

  18. சொம்பு சொல்வதென்னவென்றால்:

    யோவ் வாந்தி. ச்சே வாதி!

    பிராது கொடுக்க இது என்ன பதினெட்டுப் பட்டியும் கூடுன பஞ்சாயத்தா?

    விவாதக் களம்யா! விவாதக் களம்!

  19. பிரதி வாதி சொல்வதென்னவென்றால்:

    இராம் கெட்டவரே என்று வாதிட நான் வந்திருக்கிறேன்.

    தோ பாருங்க! வக்காலத்து பேப்பர்!

  20. வாதி சொல்வதென்னவென்றால்:

    இந்த வாதத்திற்கு 15 நநட்கள் வாய்தா வழங்க வேண்டுமென்று கனம் கோர்ட்டார் அவர்களைத் தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்!

  21. நடுவர் சொல்வதென்னவென்றால்:

    வாய்தா குடுக்க இதென்ன சைதாப்பேட்டை செஷன்ஸ் கோர்ட்டா?

  22. ஆடியன்ஸ் சொல்வதென்னவென்றால்:

    :) ))))))))))

    ஹீஹீஹீஹ்ஹீ

    ஹூஹூஹூஹூஹூ

    ஹெஹெஹெஹெஹெஹெஹெஹ்!

  23. குமாஸ்தா சொல்வதென்னவென்றால்:

    ரெண்டு இட்லி ஒரு வடகறி!

    ரெண்டு இட்லி ஒரு வடகறி!

    ரெண்டு இட்லி ஒரு வடகறி!

  24. நடுவர் சொல்வதென்னவென்றால்:

    ம்ஹூம்!

    கஷ்டம்யா உன்னோட!

    ஆர்டர் ஆர்டர் னு சொன்னா அமைதியா இருங்க! ஆளாளுக்குப் பேசப்பிடாதுன்னு அர்த்தம்!

  25. பிரதி வாதி சொல்வதென்னவென்றால்:

    கணம் நடுவர் அவர்களே!

  26. நடுவர் சொல்வதென்னவென்றால்:

    யோவ் பிரதி வாதி! கொஞ்சம் நிறுத்து!

    நான் கொஞ்சம் உடம்பு போட்டிருக்கேன்தான்! அதுக்காக கணம் நடுவர் னு சொல்லிக் காட்டுறேய்யா!

    :(

  27. வாதி சொல்வதென்னவென்றால்:

    மையர் அவர்களை கிண்டலடிப்பதை ஆட்சேபிக்கிறேன்!

  28. நடுவர் சொல்வதென்னவென்றால்:

    ஆட்சேபம் ஓவர் ரூல்டு!

  29. பிரதி வாதி சொல்வதென்னவென்றால்:

    தேங்க்யூ மை லார்ட்!

  30. நடுவர் சொல்வதென்னவென்றால்:

    லார்டோட நிறுத்திக்கணும் சொல்லிட்டேன்!

    அதுக்கப் புறம் எதுவும் கேக்கப் பிடாது! சொல்லவும் பிடாது!

    இது வரைக்கும் போட்ட பின்னூட்டங்காளை இராயலார் பிரசுரிக்கும் வரை விவாதக் களம் அவசரப் படுத்தப் படுகிறது!

  31. ஆஃப் ஆறுமுகம் சொல்வதென்னவென்றால்:

    //இது வரைக்கும் போட்ட பின்னூட்டங்காளை இராயலார் பிரசுரிக்கும் வரை விவாதக் களம் அவசரப் படுத்தப் படுகிறது!//

    அவசரப் படுத்தப் படுகிறதுன்னா இன்னா நைனா?

  32. நடுவர் சொல்வதென்னவென்றால்:

    அதாம்மே கோர்ட்டு ஈஸ் அர்ஜெண்டுன்னெல்லாம் படத்துல சொல்லுவாங்களே1

  33. ஆஃப் ஆறுமுகம் சொல்வதென்னவென்றால்:

    அப்படி வெளக்கமா தமிழ்ல்லே சொன்னாதான என்னை மாதிரி கைநாட்டுக்கெல்லாம் வெளங்கும்!

  34. இராம் சொல்வதென்னவென்றால்:

    அனானி படை ‘தள’பதி பயங்கர ஃபார்மிலே இருக்கிறமாதிரி தெரியுது….. :) ))

  35. தமிழ் வாத்தியார் சொல்வதென்னவென்றால்:

    //கோர்ட்டு ஈஸ் அர்ஜெண்டுன்னெல்லாம் //

    ம்ஹூம்! இதுதான் தமிழ்லே வெளங்குற மாதிரியா!

    வெளங்குன மாதிரிதான்!

    இட் ஈஸ் டூ பேட்!

  36. மின்னுது மின்னல் சொல்வதென்னவென்றால்:

    (ராமை)பின்ன போவது யாரு…?

    மற்றும் கலக்கல் நிகழ்ச்சிகள்

    :)

  37. Anbusivam சொல்வதென்னவென்றால்:

    சரியான உள்குத்துடா சாமி இது….!!!

  38. Anonymous சொல்வதென்னவென்றால்:

    யன்னா தலை, இந்தாக் குத்து குத்துறீங்க :-) !!!!

  39. பிரேம்குமார் சொல்வதென்னவென்றால்:

    ‘கலைஞர் டி.வி’ன்னு சொல்றப்பவே தெரிஞ்சு போச்சு இவுக தமிழ்ப்பற்று. நேத்து ஒரு நிகழ்ச்சி பார்த்தேன் ‘மானாட மயிலாட’. நம்ம சிம்ரன் ஆத்தா வந்து நல்லா பேசிக்கிட்டு கடந்துச்சு சுத்த ஆங்கிலத்தில்……….. நல்லா தான்யா தமிழ் வளக்குறாய்ங்க‌

    என் புருசனும் கச்சேரிக்கு போனான் கதை தான் போல. அட போங்கப்பு

மறுமொழி இடுக

பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்